Wednesday, November 24, 2010

போஸ்ட்மேன்களை பூத் அலுவலர்களாக நியமிக்க தேர்தல் கமிஷன் உத்தரவு

பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2010,23:45 IST
விருதுநகர் : போஸ்ட்மேன், கிராமப்புற செவிலியர்கள் உட்பட 12 வகையான பணியாளர்களை, பூத் அலுவலர்களாக நியமிக்க மத்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்காளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. புதிய வாக்காளர் சேர்க்கை, நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் குறித்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றின் மீதான விசாரணை நடத்த பூத் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பல ஊராட்சிகளில் இப்பணிகளை வி.ஏ.ஓ.,க்கள், பள்ளி ஆசிரியர்கள் செய்து வருகின்றனர். வி.ஏ.ஓ.,க்கள் இல்லாத ஊர்களில் அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், ஊராட்சி உதவியாளர்கள், ஒப்பந்த ஆசிரியர்கள், கிராமப்புற செவிலியர்கள், மாநகராட்சி, நகராட்சிகளில் வரி வசூலிப்பவர்கள், போஸ்ட்மேன் உட்பட 12 வகையான பணியாளர்களை நியமிக்கலாம் என, மத்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
Source : Dinamalar.

No comments:

All ASPs & IPs are requested to update Member Database in Right pane